காதலின் இலக்கணம்.!
இரண்டு இதயங்களும் அன்பிலே தோய்ந்து, அன்பிலே நனைந்து, அன்பிலே தவழ்ந்து, அன்பிலேயே ஐக்கியமாவதுதான் காதலின் இலக்கணம்!
வீணையில் விதம் விதமாக ராகங்கள் வாசிக்கலாம். ஆனால், கைப்பிடித்தவருக்காக வாசிக்-
கும் காதல் ராகம் கடைசி மூச்சுவரை சுருதியும், லயமும் கலையாமல் சுத்தமாக ஒலிக்க வேண்டும். காதலென்பது ஒரு மகா யக்ஞம். அது முனிவர்களின் தவத்தைவிடவும் புனிதமானது. சாதிகளற்ற சமுதாயம் என்றாவது ஒரு நாள் காதலினால் மட்டுமே சாத்தியம் ஆகும். ஆதலால் மானிடரே, காதல் செய்வீர்!
|